எம் பள்ளியின் சிறப்புகள்
எம் பள்ளியின் சிறப்புகள்
எங்களது பள்ளியானது செப்டம்பர் 1, 2018 முதல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு இந்த கல்வியாண்டு (2019-2020) முதல் 10 ஆம் வகுப்பு செயல்பட்டு வருகிறது.
1.கராத்தே:
மாறிவரும் கால சூழ்நிலையில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் தருவது அவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வண்ணமாக SSA மூலமாக ஒரு சிறப்பு கராத்தே ஆசிரியர் நியமிக்கப்பட்டு பெண் குழந்தைகளுக்கு கராத்தே வகுப்புகள் நடத்தப்பட்டு மாணவிகள் மாவட்ட அளவில் கலந்து கொண்டு பரிசுகளும் பெற்றனர்.
2. அறிவியல் ஆய்வுகள்:
பொதுவாக அறிவியல் என்பது நம் அன்றாட வாழ்வோடு ஒன்றியிருப்பது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அறிவியல் புதைந்துள்ளது. அறிவியலின் அடிப்படையை நுகர்ந்து பழகிவிட்டால், நுகர கற்றுக் கொடுத்துவிட்டால்... இதோ சில விஞ்ஞானிகள்...





எங்கள் பள்ளி
எங்களது பள்ளியின் பெயர் பகவான் மகாவீர் நகரவை உயர்நிலைப்பள்ளி, எங்களது பள்ளியானது கோவை மாவட்டத்தில் மலைகளின் அரசியாம் ஊட்டியின் தாழ்வார பகுதியான மேட்டுப்பாளையத்தில் உள்ள சங்கர் நகரில் அமைந்துள்ளது.
எங்களது பள்ளியானது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ளது. ஆண், பெண் என இருபாலரும் படிக்கும் பள்ளி. எங்கள் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி மற்றும் ஆங்கில வழிக் கல்வி உள்ளது.
எங்களது பள்ளியில் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 14 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்
me